
பல்கலை.யில் தேசியக் கருத்தரங்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி இயக்க பொருளியல் பிரிவு சார்பில், புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழும நிதி உதவியுடன் இயற்கை பண்ணையமும், வளம் நீடித்த வேளாண்மையும் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி இயக்க பொருளியல் பிரிவு சார்பில், புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழும நிதி உதவியுடன் இயற்கை பண்ணையமும், வளம் நீடித்த வேளாண்மையும் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
கருத்தரங்க தொடக்க விழாவுக்கு தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.புகழேந்தி தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டார். கலைப்புல முதல்வர் ராஜேந்திரன் இயற்கை பண்ணையம் மற்றும் வளம் நீடித்த வேளாண்மையின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். கல்விக்குழும இயக்குநர் மணிவண்ணன் வாழ்த்துரையாற்றினார். கருத்தரங்க இயக்குநர் சுந்தர், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். செழியன் நன்றி கூறினார்.
கருத்தரங்கு நிறைவு விழாவில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், பொருளியல்துறை முனைவர் ரவி ஆகியோர் பங்கேற்று நிறைவு உரையாற்றினர். ஏற்பாடுகளை பொருளியல் பிரிவு ஆசிரியர்கள் சுந்தர், அசோகன், செழியன், அண்ணாதுரை, குமார், விஜயன், சிவக்குமார், ராமஜெயம், கோபால், ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






