47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்து சமூக நலத் துறை இயக்குநர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சமூக நலத் துறை இயக்குநர் வே.அமுதவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:23 am

தினமணி

கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சமூக நலத் துறை இயக்குநர் வே.அமுதவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலமாக "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சமூக நலத் துறை இயக்குநர் வே.அமுதவல்லி செவ்வாய்க்கிழமை கடலூர் வந்திருந்தார். அவர், கடலூர் அரசு மருத்துவமனை, திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்கு சிகிச்சை பெறும் தாய்மார்கள், கர்ப்பிணிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கடலூர் மாவட்ட அரசு சேவை இல்லம், அரசு குழந்தைகள் காப்பகத்தில் பயிலும் பெண் குழந்தைகள், கடலூர் நகர்புற காந்தி நகர் அங்கன்வாடி மையம், உச்சிமேடு கிராமத்தில் உள்ள சுய உதவிகுழுக்கள், அங்குள்ள பெண் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடினார்.
 பின்னர், கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில், "பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தைச் செயல்படுத்தும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தினார்.
 குழந்தைகள் நல இணை இயக்குநர் நந்திதா, மாவட்டத் திட்ட அலுவலர் (விழுப்புரம்) கோ.அன்பழகி, கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்டத் திட்ட அலுவலர் பழனி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) எஸ்.மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.ஆர்.ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.