வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து விபத்து:15 பேர் காயம்

திட்டக்குடி அருகே கீழப்பெரம்பலூரில் தனியார் கல்லூரிப் பேருந்து சாலையோர வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:59 am

தினமணி

திட்டக்குடி அருகே கீழப்பெரம்பலூரில் தனியார் கல்லூரிப் பேருந்து சாலையோர வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்.
 திட்டக்குடி அருகேயுள்ள தொழுதூரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் பேருந்து மூலமாகப் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வருவது வழக்கம்.
 அதன்படி, புதன்கிழமை பெரம்பலூர் மாவட்டம், வயலூர், கீழப்பெரம்பலூர் பகுதிகளில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தொழுதூர் நோக்கி பேருந்து சென்றது. கீழப்பெரம்பலூர் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமுள்ள வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில், 5 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், 10 பேர் சிறிய அளவில் காயமடைந்தனர். உடனடியாக மாணவர்கள் மீட்கப்பட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த 5 பேர் தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர்.
 இதுகுறித்து மங்கலமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.