மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி

கடலூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கிழக்கு ராமாபுரத்தில் அட்மா விரிவாக்க மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கறவை மாடு வளர்ப்பு குறித்த விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2018, 4:00 am

தினமணி

கடலூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கிழக்கு ராமாபுரத்தில் அட்மா விரிவாக்க மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கறவை மாடு வளர்ப்பு குறித்த விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
 இதில் கிழக்கு ராமாபுரத்தில் கறவை மாடு வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் 25 பேருக்கு பல்வேறு பாடத் தலைப்புகளில் பண்ணை பள்ளி நடத்தப்பட்டது. இதற்கான தொடக்க விழாவுக்கு கடலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர் சு.பூவராகன் தலைமை வகித்தார். சார்-ஆட்சியர் (பயிற்சி) ப.ஜெகதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.
 கால்நடை மருத்துவர் ஸ்டாலின் வேதமாணிக்கம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் பி.முரளி ஆகியோர் கறவை மாடுகள் பராமரிப்பு, நோய்களைக் கண்டறியும் முறை, அதற்கான சிகிச்சை முறை, முன்தடுப்பு முறைகள் குறித்து விளக்கியதுடன் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர்.
 அசோலா தீவன வளர்ப்பு, ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன வளர்ப்பு குறித்து முன்னோடி விவசாயி தனசேகரன் விளக்கினார். கறவை மாடு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள், உலர் மற்றும் பசுந்தீவனம் அளித்தல், மடிவீக்க நோய் தடுப்பு, மினரல் மிக்சர் அளிப்பது, உண்ணிகள் தாக்குதலை தவிர்ப்பது, குடல்புழு நீக்கம், செயற்கை முறை கருத்தரித்தல், சினை ஊசி போடுவது, பால் கறக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
 வேளாண்மை உதவி அலுவலர் சங்கர்தாஸ், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்ராஜ், கண்ணன் ஆகியோர் பண்ணைப் பள்ளியை ஒருங்கிணைப்பு செய்து கருத்துக் காட்சி அமைத்திருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.