மாநில திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக மாநில திறன் மேம்பாட்டு மாநாடு சென்னை கிண்டியில் வருகிற 9,10-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் திறன் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படும். தெரிவு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
இந்த மாநாட்டில், தமிழ்நாட்டின் திறன் சூழல் - திறன் முனைப்புகள் மற்றும் வாய்ப்புகள், உலக அளவிலான திறன் பயிற்சி குறித்த சிறந்த நடைமுறைகள் ஆகிய தலைப்புகளில் துறை வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்குகளும் நடத்தப்படும்.
மாநாட்டைத் தொடர்ந்து 11, 12 ஆகிய தேதிகளில் தனித்திறன் தேடும் நிகழ்வு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ந்ண்ப்ப்ள்ட்ன்ய்ற்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் தனித் திறன் தேடலில் நேரடியாகப் பங்கேற்கலாம். மாநில அளவில் நடத்தப்படும் இந்தத் தனித்திறன் தேடலில் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஜூன் 21 முதல் 23-ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியிலும், ஜூலை மாதம் புதுதில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்என ஆட்சியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.