மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

கடலூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் மூடப்படுவதைக் கண்டித்து, அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :29 மார்ச் 2018, 3:12 am

கடலூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் மூடப்படுவதைக் கண்டித்து, அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சுமார் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், தினமும் சுமார் 15,000 தபால்களைப் பிரிக்கும் திறன் கொண்ட திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் உள்ள
 ஆர்.எம்.எஸ். தபால் பிரிப்பு அலுவலகத்தை மூடுவதற்கு உத்தேசித்துள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும். திருப்பாதிரிபுலியூர், துறைமுகம் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.
 துறைமுகம் சந்திப்பிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருப்பாதிரிபுலியூரிலிருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இணைப் பொதுச் செயலர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். நுகர்வோர்கள் கூட்டமைப்புத் தலைவர் எம்.நிஜாமுதீன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார். ஆர்.எம்.எஸ். அலுவலர்கள் சங்கத்தின் திருச்சிக் கோட்டத் துணைப் பொதுச் செயலர் குணசேகரன், கிளைச் செயலர் ரவி, வர்த்தகச் சங்கத்தின் தலைவர் வி.பி.எஸ்.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் நிறைவுரையாற்றினார்.
 ஆர்.எம்.எஸ். பிரிவை மூடும் முடிவைக் கைவிடவில்லையெனில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருப்பதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.