கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் போராட்டம்

பொன்னேரி கிராமத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:57 am IST

பொன்னேரி கிராமத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது பொன்னேரி கிராமம். கோ.மாவிடந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்ததாம். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
 எனவே, குடிநீர்த் தேவைக்காக கிராம மக்கள் அருகே உள்ள கிராமத்துக்குச் சென்றும், விவசாய விளைநிலங்களில் பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரையும் பிடித்து சமாளித்து வந்தனர். எனினும், குடிநீர்ப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட முயன்றனர்.
 இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் சாலையோரத்தில் நின்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்துச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.