பொன்னேரி கிராமத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது பொன்னேரி கிராமம். கோ.மாவிடந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்ததாம். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
எனவே, குடிநீர்த் தேவைக்காக கிராம மக்கள் அருகே உள்ள கிராமத்துக்குச் சென்றும், விவசாய விளைநிலங்களில் பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரையும் பிடித்து சமாளித்து வந்தனர். எனினும், குடிநீர்ப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் சாலையோரத்தில் நின்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!

நீட் மறுதேர்விலும் குளறுபடிகள்; மாணவர்களின் பணத்தை அபகரிக்க மோசடி! - சு. வெங்கடேசன்

முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


