முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மணமான பெண் காதலருடன் தற்கொலை

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே திருமணமான பெண் தனது காதலருடன் முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

Updated On :5 நவம்பர் 2018, 9:24 am IST

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே திருமணமான பெண் தனது காதலருடன் முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
 கடலூர் கிழக்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் ராம்குமார் (22). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தேவநாதன் மகள் தேவஸ்ரீ(19). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 தேவஸ்ரீக்கும், என்.கீரப்பாளையத்தைச் சேர்ந்த சிவானந்தம் என்பவருக்கும் கடந்த செப்.1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுமார் 10 நாள்கள் கணவருடன் இருந்த தேவஸ்ரீ, திடீரென தனது தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயமானார். இதுகுறித்து சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் ராம்குமார், தேவஸ்ரீயுடன் மேற்கிருப்பு கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி ஜெயகாந்தி வீட்டுக்கு வந்தாராம். ராம்குமாரின் மாமா சிவா அந்தப் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உரமிட சென்ற போது, அங்கு மரத்தில் ராம்குமாரும், தேவஸ்ரீயும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
 தகவலறிந்த ஊ.மங்கலம் போலீஸார் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.