மங்கலம்பேட்டை அருகே மதுப் புட்டிகள் பதுக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீஸார் கோ.பூவனூர் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஆலமரத்தின் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கோ.பூவனூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் நாராயணன் (55) என்பதும், அனுமதியின்றி மது புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து நாராயணனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 11 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடக்ககூடாது: ப.சிதம்பரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

