ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

கடலூர் அரசு மருத்துவமனை எதிரே மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 5-ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய மருத்துவ முகாம் புதன்கிழமை நடத்தப்படாததால், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 5-ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய மருத்துவ முகாம் புதன்கிழமை நடத்தப்படாததால், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 20 பேர் மருத்துவமனை எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 5-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம்.
 அன்றைய தினம் மருத்துவரை சந்தித்து சான்று பெறும் மாற்றித் திறனாளிகள் அடையாள அட்டைகளையும் பெறுவர்.
 இந்த நிலையில் புதன்கிழமை (செப்.5) மருத்துவ முகாமில் பங்கேற்பதற்காக சுமார் 20 மாற்றுத் திறனாளிகள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஆனால், அரசு மருத்துவர்கள் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளவில்லையாம்.
 இதனால், சான்றிதழ் பெற முடியாமல் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றமடைந்தனர். இதைக் கண்டித்து, 20-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்தச் சம்பவத்தால் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.