இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தேசிய வாக்காளர் தின கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் அங்கம்-22 சார்பில் தேசிய வாக்காளர்

Updated On :13 பிப்ரவரி 2019, 9:40 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் அங்கம்-22 சார்பில் தேசிய வாக்காளர் தின கருத்தரங்கம்  பொறியியல் புலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 திட்ட அலுவலர் கே.தமிழ்மாறன் வரவேற்றார். பொறியியல் புல முதல்வர் என்.கிருஷ்ணமோகன் கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தலைமை வகித்தார். சிதம்பரம் வட்டாட்சியர் ஏ.ஹரிதாஸ், துணை வட்டாட்சியர் (தேர்தல்) கே.இலஞ்சூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   அறிவியல் துறைத் தலைவர் தேவநாதன், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை உதவிப் பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கே.தமிழ்மாறன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.