வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 9:42 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வழக்குரைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சேம நல நிதியை அதிகரிக்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மூத்த வழக்குரைஞர் அம்பேத்கர் தலைமை வகித்தார். 
வழக்குரைஞர்கள் சந்திரசேகர், முன்னாள் அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவர் ஆனந்தகண்ணன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவற்றை செயல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாகக் கூறியும் முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.