எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காவல் நண்பர்களுக்கு  புத்தாக்கப் பயிற்சி

காவல் நண்பர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:47 am IST

காவல் நண்பர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட காவல் துறையினருக்கு உதவிடும் வகையில் 200 பேர் காவல் நண்பர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள், அந்தந்தப் பகுதிகளில் காவல் துறையினருடன் இணைந்து இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவதோடு, சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்து வருகின்றனர். மேலும், திருவிழா காலங்களில் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூரில் காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 
இயற்கை வளம் நிறைந்த கடலூர் மாவட்டம் மனித வளம் குறைபாடுகளால் பின்தங்கியுள்ளது. எனவே, காவல் நண்பர்கள் தங்களது திறமையால் இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும். காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக விளங்கக் கூடிய காவல் நண்பர்களின் அர்ப்பணிப்பு பணி பாராட்டுக்குரியது. கடலூர் மாவட்டம் குற்றமில்லா மாவட்டமாக திகழ்ந்திட காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் துணைக் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் தேவி, புனித வளனார் கல்லூரிப் பேராசிரியர்கள் சந்தானராஜ், அன்னம்மாள் ஆகியோர் புத்தாக்கப் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற காவல் நண்பர்களுக்கு சீருடையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.