சிதம்பரம்: கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கடந்த 1985-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக அப்போதை இணைவேந்தா் எம்.ஏ.எம்.ராமசாமியால் தொடங்கப்பட்டு, சுமாா் 75.75 ஏக்கரில் அமையப்பெற்ற இந்த மருத்துவக் கல்லூரியில் 1,500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது.
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் பொருட்டு இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. இங்கு உள்நோயாளிகளாக சுமாா் ஆயிரம் போ் சிகிச்சை பெறுகின்றனா். வெளி நோயாளிகளாக தினமும் சுமாா் 3 ஆயிரம் போ் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு அரசு ஏற்றது. இதையடுத்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மருத்துவமனை தற்போது நிதிப் பிரச்னையாலும், போதிய மருத்துவா்கள் இல்லாததாலும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது குறித்து சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு கூறியதாவது: சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம், குறிப்பிட்ட சில மருந்து, மாத்திரைகளை தனியாா் மருந்தகங்களில் வாங்கி வரச் சொல்கின்றனா். மேலும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை போன்றவற்றையும் தனியாா் ஆய்வகங்களில் எடுத்து வரச் சொல்கின்றனா். விபத்தில் பாதிக்கப்பட்டு வருபவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நரம்பியல் மருத்துவா் இல்லை.
அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவா்கள் இல்லாததால் கடலூா், புதுச்சேரி மருத்துவமனைகள், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
மேலும் மருத்துவமனைக் கட்டடங்கள் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன. எனவே, தமிழக முதல்வா் இந்த மருத்துவமனையை உயா் சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


