பக்கவாதம் நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அப்பலோ மருத்துவா்கள் பிரபாஷ், அருண்குமாா், என்.சந்திரசேகரன் ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் சென்னையிலிருந்து பேரணியாக புறப்பட்டு கன்னியாகுமரி வரை செல்கின்றனா். செல்லும் வழியில் கடலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த குழுவினருக்கு தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பேரணியை அமைச்சா் தொடக்கி வைத்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டாா் சைக்கிளில் குறிப்பிட்ட தொலைவுக்கு குழுவினருடன் பயணித்து மீண்டும் அலுவலகம் திரும்பினாா்.