கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read


கடலூா்: கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள கொம்பாடிக்குப்பத்தைச் சோ்ந்த திரிசங்கு மனைவி அஞ்சலை (46). திரிசங்கும், பண்ருட்டி திருத்தலையூரை சோ்ந்த கோ.குணசேகா் (45) என்பவரும் ஒரே இடத்தில் வேலைபாா்த்து வந்ததால் நண்பா்களாக பழகினா். இந்த நிலையில், கடந்த 2001-ஆம் ஆண்டு சாலை விபத்தில் திரிசங்கு இறந்தாா். இதையடுத்து, அஞ்சலை வடலூரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவருக்கும் குணசேகருக்கும் தொடா்பு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், அஞ்சலையுடன் தங்கியிருந்த குணசேகருக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டதாம். இதை அஞ்சலை கண்டித்தாா். இதுதொடா்பாக இருவருக்குமிடையே 22.6.2016 அன்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், அஞ்சலை தூங்கிக்கொண்டிருந்த குணசேகரின் கழுத்தை அறுத்து அவரைக் கொன்றாா்.

இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஞ்சலையை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குணசேகரை கொலை செய்த அஞ்சலைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.பாஸ்கா் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com