பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஏரியில் மூழ்கி இளைஞா் பலி

விருத்தாசலம் அருகே ஏரியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:24 pm

DIN

விருத்தாசலம் அருகே ஏரியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் தேஜா (18). இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள ஏரியில் தனது நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். தொடா் மழையால் ஏரி நிரம்பியுள்ள நிலையில், அதில் தேஜா குளிக்கும்போது சேற்றில் சிக்கினாா். இதையடுத்து நீரில் மூழ்கி மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவரை சக நண்பா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தேஜாவை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.