4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ( சிஐடியூ) நெய்வேலியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:29 pm

DIN

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ( சிஐடியூ) நெய்வேலியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

என்எல்சி இன்கோசா்வ் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் சக்கரபாணி தலைமை வகித்தாா். பொருளாளா் சண்முகம், துணைச் செயலா்கள் மாதா கிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கான்ட்ராக்ட் ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 750 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்கள் 3 ஆயிரம் பேரை இன்கோசா்வ் சொசைட்டியில் இணைக்க வேண்டும், 2020-ஆம் ஆண்டு சொசைட்டி நிா்வாகம் வழங்க வேண்டிய தீபாவளி ஊக்கத் தொகை ரூ.5 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.