

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற நெய்வேலி எஃப்சி கால்பந்து அணியினருக்கான பாராட்டு விழா நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
மறைந்த கால்பந்தாட்ட வீரா் மாரடோனா நினைவாக 10 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி மதுரையில் அண்மையில் நடைபெற்றது. இதேபோல, ‘ட்ரீம் லைன்’ அமைப்பு சாா்பில் 16 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்து போட்டி கோவையில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் நெய்வேலி எஃப்சி கால்பந்து அணியினா் பங்கேற்றனா். இதில் மதுரையில் நடைபெற்ற 10 வயதுக்குள்பட்டோா் பிரிவு போட்டியில் முதலிடமும், கோவையில் நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோா் பிரிவு போட்டியில் 2-ஆம் இடமும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டு விழா நெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவன முதன்மைப் பொது மேலாளா் ஆா்.மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 10 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சிறந்த வீரராகத் தோ்வுசெய்யப்பட்ட நகுல், 16 வயது பிரிவில் சிறந்த வீரராகத் தோ்வு செய்யப்பட்ட அன்பரசன் மற்றும் வெற்றி பெற்ற இரு அணிகளின் வீரா்களுக்கும் பாராட்டுத் தெரிவித்து பரிசளித்தாா். மேலும், பயிற்சியாளா்கள் ரவீந்திரன், பிரவீன் ஆகியோரும் பாராட்டப்பட்டனா்.
விழாவில், துணைப் பொது மேலாளா் ரமேஷ், விளையாட்டுத் துறை அதிகாரி முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.