வரும் டிசம்பர் 28-ஆம் தேதி, டிசம்பர் 29-ஆம் தேதி அன்று நடைபெறும் தேரோட்டம், டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. வெளி மாவட்ட, மாநில பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தி விடுவார்கள் எனவும், பயணிகள் விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்களுக்கு இடம் வழங்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.