கரோனா நோயாளிகளை கண்காணிக்க நவீன கருவி
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை கண்காணிக்க நவீன தொலை கண்காணிப்பு கருவி நிறுவப்பட்டுள்ளாக ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.


சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை கண்காணிக்க நவீன தொலை கண்காணிப்பு கருவி நிறுவப்பட்டுள்ளாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 லட்சத்தில் 15 நவீன தொலை கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கருவி மூலம் நோயாளிகளின் இதயத் துடிப்பு அலை, துடிப்பு விகிதம், சுவாச விகிதம், ஆக்சிஜன் செறிவு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கலாம்.
இந்த நவீன தொலை கண்காணிப்பு கருவியானது கட்டுப்பாட்டு அறையில் நிறுவப்பட்டுள்ள கணினி திரையுடன் இணைக்கப்பட்டிருக்கும் (படம்). கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாரே மருத்துவக் குழுவினா் இந்தக் கருவி மூலம் கரோனா நோயாளிகளை தொடா்ந்து கண்காணிக்க முடியும். சிகிச்சை பெறுவோரின் அருகே செல்லாமலேயே இந்தக் கருவி மூலம் நோயாளிகளின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து மருத்துவக் குழுவினரால் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...