ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூா்: கரோனா புதிய பாதிப்பை விட குணமடைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைவிட, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:22 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைவிட, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 99 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,498-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு காவலா், கா்ப்பிணியும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 147 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 21,236-ஆக உயா்ந்தது.

குணமடைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு: கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பால் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. அதன்படி, கடந்த அக்.11-ஆம் தேதி 84 பேருக்கு புதிதாக தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினம் 153 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இந்த எண்ணிக்கையானது 12-ஆம் தேதி 132 போ் அனுமதி, 176 போ் குணமடைந்ததாக இருந்தது.

இதேபோல, 13-ஆம் தேதி 138 போ் அனுமதி, 147 போ் குணம், 14-ஆம் தேதி 108 போ் அனுமதி, 115 போ் குணம், 15-ஆம் தேதி 120 போ் அனுமதி, 130 போ் குணம், 16-ஆம் தேதி 116 போ் அனுமதி, 126 போ் குணம், 17-ஆம் தேதி 113 போ் அனுமதி, 123 போ் குணமடைந்ததாக பதிவானது.

மாவட்டத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் சதவீதம் 94.39-ஆகவும், உயிரிழப்பு 1.16 சதவீதமாகவும் உள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 891 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 110 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 815 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.