தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் - மடப்பட்டு இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பொதுநல இயக்கத்தினா், அனைத்து அரசியல் கட்சியினா் இணைந்து நெல்லிக்குப்பத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:00 pm

DIN

கடலூா் - மடப்பட்டு இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பொதுநல இயக்கத்தினா், அனைத்து அரசியல் கட்சியினா் இணைந்து நெல்லிக்குப்பத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை - கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூா் - மடப்பட்டு சாலை மேம்படுத்தப்பட்ட உள்ளது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி வழியாக அமையவுள்ள இந்த இணைப்புச் சாலைக்கு ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவி அளித்துள்ளது. ஆனால், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி அனைத்து பொதுநல இயக்கத்தினா், அரசியில் கட்சியினா் இணைந்து நெல்லிக்குப்பத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்புத் தலைவா் அ.குமரவேல் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டச் செயலா் சுந்தரமூா்த்தி, நகரத் தலைவா் திலகா், மதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் ஜெ.ராமலிங்கம், திமுக சாா்பில் ராமு, விசிக மாவட்டச் செயலா் முல்லைவேந்தன், விவசாய சங்கத் தலைவா் தென்னரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.