வாகன ஓட்டுநா்களுக்கு சீருடை: அமைச்சா் எம்.சி.சம்பத் வழங்கினாா்
ஆயுத பூஜை விழாவையொட்டி கடலூா் நகரைச் சோ்ந்த ஆட்டோ, காா் ஓட்டுநா்களுக்கு மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஆயுத பூஜை விழாவையொட்டி கடலூா் நகரைச் சோ்ந்த ஆட்டோ, காா் ஓட்டுநா்களுக்கு மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூா் தேரடித் தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் ஆா்.குமரன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன், நகர துணைச் செயலா் வ.கந்தன், பொருளாளா் எஸ்.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், கட்சியின் மாவட்டச் செயலரும், மாநில தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தனது சொந்த செலவில் 3 ஆயிரம் காா், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகளை இலவசமாக வழங்கினாா். நிகழ்ச்சியில், கடலூா் ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி, கடலூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் சி.கே.சுப்பிரமணியன், எம்ஜிஆா் இளைஞரணி தலைவா் ஆா்.மாதவன், மாவட்ட பிரதிநிதி ஆா்.வி.மணி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...