ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூரில் இறந்த மோப்ப நாய்க்கு காவல்துறையினர் மரியாதை

கடலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில்  கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மோப்பநாய் இறந்ததைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

News image
மோப்ப நாய்க்கு இறுதி மரியாதை செலுத்திய காவல்துறையினர்
Updated On :2 செப்டம்பர் 2020, 1:02 pm

DIN

கடலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில்  கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மோப்பநாய் இறந்ததைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில்  கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் புருனே எனும் மோப்ப நாய் பணியாற்றி வந்தது. பல வழக்குகளில் துப்பு துலங்க உதவியாக இருந்து வந்த புரூனே அனைவரிடமும் அன்பாகப் பழகி வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக புரூனேவிற்கு ஓய்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் மோப்ப நாய் பிரிவு பராமரிப்பில் இருந்து வந்த புருனே புதன்கிழமை உயிரிழந்தது.

இறந்த மோப்ப நாய்க்கு துணை காவல் கண்காணிப்பாளர்  கங்காதரன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்)  தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விஜயகுமார், துப்பறியும் மோப்ப நாய் பிரிவு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு  காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் மாவட்ட காவல் துறையினரின் இந்த நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.