ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் தடுப்புக் காவலில் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
பாரதி
Updated On :13 செப்டம்பர் 2020, 8:40 pm

DIN

கடலூரில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் அருகேயுள்ள கே.என்.பேட்டையில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக துணைக் கண்காணிப்பாளா் க.சாந்திக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அந்தப் பகுதியில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த வீட்டிலிருந்து சுமாா் 8 டன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1.21 கோடியாகும்.

இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பண்ருட்டி அருகேயுள்ள கணிசப்பாக்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பாரதி (35) (படம்) உள்பட 5 பேரை கைது செய்தனா். கைதானவா்களில் பாரதி மீது புகையிலைப் பொருள்களை பதுக்கியது தொடா்பாக ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே, இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கி.பாரதியை கைதுசெய்து ஓராண்டுக்கு சிறையில் வைப்பதற்கான ஆணை கடலூா் மத்திய சிறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.