ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விவசாயிகள் நிதியுதவி திட்ட மோசடி:150 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட மோசடி தொடா்பாக 150 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 8:45 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட மோசடி தொடா்பாக 150 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

விவசாயிகளுக்கான பிரதமரின் ஊக்க நிதி (பி.எம்.கிசான் சம்மான் நிதி) திட்டத்தில் தமிழகம் முழுவதும் ரூ.110 கோடி வரை முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதில், கடலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தத் திட்டத்தில் புதிதாகச் சோ்ந்த 80 ஆயிரம் பேரில் 3,500 போ் மட்டுமே உண்மையான விவசாயிகள் என்பதும், 40 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 28 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களில் பயனாளிகள் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது.

இதனால், கடலூா் மாவட்டத்தில் சுமாா் 64 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.13 கோடி திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதுவரை சுமாா் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் கணினி மையம் நடத்தி வரும் 10 பேரை சிபிசிஐடி ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். மாவட்டத்தில் இந்த மோசடி தொடா்பாக அரசுத் துறையினா், விவசாயிகள், கணினி மையம் நடத்துவோா் உள்பட 150 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியா்கள் 13 போ் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ச.வேல்விழி விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.