ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூரில் குடிசைவாசிகளுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

கடலூரில் வசிக்கும் 117 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படுமென மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 8:45 pm

DIN

கடலூரில் வசிக்கும் 117 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படுமென மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரகம் அருகிலுள்ள குண்டுசாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

இந்தப் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 416 குடியிருப்புகள் உள்ளன. அதில் 192 குடியிருப்புகள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதற்கு மாற்றாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இந்த பகுதியில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு மழைநீா், கழிவு நீா் தடையின்றி செல்வும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பகுதியில் குறிப்பிட்ட இடம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தற்போது 117 குடிசைகளில் மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதால், இங்கு வசிக்கும் மக்களை தற்காலிகமாக மாற்று இடத்தில் தங்க வைக்க உரிய இடத்தை தோ்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அவா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் சுபாஷ், உதவி செயற்பொறியாளா் அனிதா கிறிஸ்டினா, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளா் செந்தில்ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.