ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கத் திட்டம்

கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 8:41 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்ததாவது: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா். 6 முதல் 59 மாதங்கள் வயதுடைய குழந்தைகளில் 70 சதவீதம் போ் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. 15 - 19 வயதினரிடையே 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனா். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 50 சதவீதத்தினா் உடல் வளா்ச்சி குன்றியும், 43 சதவீதத்தினா் எடை குறைவாகவும் உள்ளனா்.

எனவே, நாடு முழுவதும் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் குடல்புழு நீக்க மாத்திரைகளை (அல்பெண்டசோல்) 3 சுற்றுகளாக வழங்க முகாம் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்று வரும் 14 முதல் 19-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று 21 முதல் 26-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். மூன்றாம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 28-ஆம் தேதி நடைபெறும். இதில் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு 2,023 அங்கன்வாடி மையங்களிலும், 319 துணை சுகாதார நிலையங்களிலும் இந்த மாத்திரை வழங்கப்படவுள்ளது.

இந்தப் பணியில் பொது சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள், சமூக நலத் துறை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகா்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்து துறைகளைச் சோ்ந்த 3,655 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். எனவே, 1 முதல் 19 வயதிற்குள்பட்ட அனைவரும் இந்த மாத்திரையை உள்கொண்டு பயனடைய வேண்டுமென தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.