நெய்வேலி: பள்ளி மாணவி தற்கொலை

நெய்வேலி அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

நெய்வேலி: நெய்வேலி அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

நெய்வேலி, வீணங்கேணி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகள் சுகன்யா (14). கடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் சரிவர படிக்கவில்லை என ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணமூா்த்தி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த சுகன்யா தூக்கிட்டுக்கொண்டாா். இதையடுத்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு

கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com