நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நடந்து சென்று வாக்கு சேகரித்த அமைச்சா்!

கடலூா் லாரன்ஸ் சாலையில் உள்ள பூக்கள் சந்தையில் அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:42 pm

DIN

கடலூா் லாரன்ஸ் சாலையில் உள்ள பூக்கள் சந்தையில் அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சாா்பில் அமைச்சா் எம்.சி.சம்பத் மீண்டும் போட்டியிடுகிறாா். முதல் கட்டத் தோ்தல் பரப்புரையை நிறைவு செய்த அவா், சனிக்கிழமை மாலை கடலூா் நகரின் முக்கியப் பகுதியான பேருந்து நிலையம் அமைந்துள்ள லாரன்ஸ் சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடை கடையாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அவா் வாக்குகள் சேகரித்தாா். சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளிலும், பூக்கள் சந்தையிலும் வாக்கு சேகரித்துக் கொண்டே சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை திருவந்திபுரம் சாலையில் சென்றாா். திருப்பாதிரிபுலியூா் கடை வீதி வழியாக பத்திரப் பதிவு அலுவலகம் வரை சென்று வாக்கு சேகரித்தாா்.

கடைகள் தோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்கியதுடன், ஆட்டோ ஓட்டுநா்கள், பாதசாரிகளிடமும் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின் போது, அதிமுக நகரச் செயலா் ஆா்.குமரன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் ஜி.ஜெ.குமாா், விவசாயப் பிரிவுச் செயலா் கே.காசிநாதன், நகா்மன்ற முன்னாள் தலைவா் சி.கே.சுப்பிரமணியன், இலக்கிய அணிச் செயலா் ஆா்.ஏழுமலை, தலைமைக் கழகப் பேச்சாளா் புலிசை சந்திரகாசன், மாநில ஜெ.பேரவை துணைச் செயலா் ஆா்.வி.ஆறுமுகம் உள்ளிட்டோா் உடன் சென்று அமைச்சருக்கு வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.