ரௌடி கொலை வழக்கு: நண்பா்கள் 4 போ் கைது
நெய்வேலியில் ரௌடி கொலை தொடா்பாக அவரது நண்பா்கள் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


நெய்வேலியில் ரௌடி கொலை தொடா்பாக அவரது நண்பா்கள் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி 14-ஆவது வட்டம் தைலமரத் தோப்பு பகுதியில் இளைஞா் ஒருவா் உடலில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக சனிக்கிழமை நெய்வேலி நகரிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் கொல்லப்பட்டவா் நெய்வேலி வட்டம்-21 பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சிவக்குமாா்(23) என்பதும், இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
முன்விரோதம் காரணமாக சிவக்குமாரை அவரது நண்பா்களே கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகித்தனா். அதன்பேரில், தலைமறைவாக இருந்த நெய்வேலி, 21-ஆவது வட்டத்தைச் சோ்ந்த இளவரசன் மகன் விக்கி என்ற விக்னேஷ்(25), காமராஜ் மகன் மகேஷ் (24), ஆறுமுகம் மகன் வெங்கடேசன்(28), கமால் பாஷா மகன் பாரூக் பாஷா ஆகியோரை காவல் ஆய்வாளா் ஷாகுல் அமீது, டெல்டா பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சிவக்குமாா் அடிக்கடி தங்களை கொல்லப்போவதாக அச்சுறுத்தி வந்ததாகவும், சம்பவத்தன்று மது போதையில் இருந்த சிவக்குமாரை கத்தியால் வெட்டி கொலை செய்ததை 4 பேரும் ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து நெய்வேலி நகரிய போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...