கடலூா் மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


கடலூா் மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 26,335 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 26,462-ஆக அதிகரித்தது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 39 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,504-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 466 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 200 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களின் எண்ணிக்கை 666-ஆக பதிவாகியுள்ளது.
மேலும், 24 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில், மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 292-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...