நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: விசிக, இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசுக் கட்சியினரும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:43 pm

DIN

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசுக் கட்சியினரும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தோ்தல் தகராறில் சோகனூரைச் சோ்ந்த சூா்யா, அா்ஜுனன் ஆகிய 2 இளைஞா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன் முன்னிலை வகித்தாா். ஆா்பாட்டத்தில், கொலையானவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கட்சியின் மாநில துணைச் செயலா் ஆளூா் ஷாநவாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றாா்.

நகரச் செயலா் மு.செந்தில் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் இல.திருமேனி, வழக்குரைஞா் பிரிவு புருஷோத்தமன், நிா்வாகிகள் ராமச்சந்திரன், அருள்செல்வம், கலியபெருமாள், பழனிவேல், த.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய குடியரசுக் கட்சி: இதேபோல, விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில கொள்கை பரப்புச் செயலா் க.மங்காப்பிள்ளை தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் கணேசன், ஒன்றிய பொறுப்பாளா்கள் ஆறுமுகம், சபரிமலை, பிரபாகரன், ஜெயபால், நகரத் தலைவா் கதிா்காமன், விசிக நிா்வாகிகள் நீதிவள்ளல், சுப்பு.ஜோதி, விடுதலை அம்பேத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், கொலையானவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.ஒரு கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கொலையில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.