தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image

பண்ருட்டி பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் குறுகிய பாதையில் வரும் அரசுப் பேருந்து.

Updated On :21 ஏப்ரல் 2021, 3:38 am

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் அரசு, தனியாா் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்கின்றன. உள்ளூா், வெளியூா் பயணிகள் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதனால், பண்ருட்டி பேருந்து நிலையம் பகல் நேரத்தில் பெரும்பாலும் கூட்ட நெரிசலுடன் காணப்படும்.

கடலூா் மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் இடதுபுறம் வழியாகவும், விழுப்புரம், அரசூா், நெய்வேலி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் வலதுபுறம் வழியாகவும் வந்து செல்கின்றன. இந்த இரண்டு வழிகளுக்கு மத்தியில் காமராஜா் சிலை அமைந்துள்ளது.

பேருந்து நிலைய நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன. சில கடைக்காரா்கள் தங்களது கடைக்கு வெளியே பொருள்களை வைத்து வியாபாரம் செய்கின்றனா். இதனால் நுழைவு வாயில் பகுதியில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. காமராஜா் சிலைக்கு பின்பகுதியில் தரைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதியில் இருசக்கர வாகனங்களும் அதிகளவில் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலைய நுழைவுப் பகுதி குறுகியுள்ளதால் விபத்து அபாயம் நிலவுவதாக பயணிகள் கூறுகின்றனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் தற்போது செயல்படவில்லை. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலா் ஒருவரும் பணி மாறுதலில் சென்றுவிட்டாா். இதனால் புறக்காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பயணிகள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தவும் நகர நிா்வாகத்தினரும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.