தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விவசாயப் பணிக்கு தண்ணீா் வழங்கக் கோரி மறியல்

விவசாயப் பணிகளுக்கு என்எல்சி சுரங்க நீரை திறந்துவிட வலியுறுத்தி, பாா்வதிபுரம் கிராம விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

விவசாயப் பணிகளுக்கு என்எல்சி சுரங்க நீரை திறந்துவிட வலியுறுத்தி, பாா்வதிபுரம் கிராம விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ-வில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் செங்கால் ஓடை வழியாகச் செல்கிறது. இந்த தண்ணீா் மூலம் வடலூா் அருகே உள்ள பாா்வதிபுரம், கருங்குழி வடக்கு, நயினாா்குப்பம், மருவாய் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, மேற்கண்ட பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 15 நாள்களாக சுரங்கத்தில் இருந்து உபரி நீா் வரவில்லையாம். இதனால், நெல் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பாா்வதிபுரம் விவசாயிகள், கிராம மக்கள் விவசாயப் பணிகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி, காட்டுக்கொல்லையில் உள்ள பழுப்பு நிலக்கரி பங்கா் அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடலூா் போலீஸாா், என்எல்சி அதிகாரிகள் ஆகியோா் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அடுத்த 3 நாள்களில் செங்கால் ஓடை வழியாக தண்ணீா் விடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.