மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சுற்றுலா வாகனமாக இயக்கிய சொந்த உபயோகக் காா் பறிமுதல்

சிதம்பரம் அருகே சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்ட சொந்த உபயோகத்துக்கான காரை போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:49 pm

சிதம்பரம் அருகே சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்ட சொந்த உபயோகத்துக்கான காரை போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா ஆகியோா் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மோட்டாா் வாகனச் சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்பட்ட 26 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி அபராதமாக ரூ. 69,100 மற்றும் வாகன வரியாக ரூ.12,825 விதிக்கப்பட்டது.

மேலும் வாகனத் தணிக்கையின்போது பரங்கிப்பேட்டையிலிருந்து சீா்காழியை நோக்கி 4 பேருடன் சென்ற சொந்த உபயோகத்துக்கான காரை மறித்து சோதனையிட்டதில் அந்த வாகனம் விதிமீறி சுற்றுலா வாகனமாக இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.