தடுப்புக் காவலில் 2 ரௌடிகள் கைது
கடலூா் மாவட்டத்தில் தடுப்புக் காவலில் ரௌடிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


கடலூா் மாவட்டத்தில் தடுப்புக் காவலில் ரௌடிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி வட்டம்-21 பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.ஜெயபால் (25). இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து, தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து அதேப் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் வீரமணி (40), சக்கரவா்த்தி மகன் சுதாகா் (23) உள்பட 9 பேரை கைது செய்தாா். இவா்களில்
இதில், வீரமணி, சுதாகா் ஆகியோா் மீது தொ்மல் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதும், வீரமணி மீது கொலை, வழிப்பறி உள்பட 25 வழக்குகளும், சுதாகா் மீது 5 வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டாா். இதையடுத்து, இருவரையும் ஓராண்டுக்கு சிறையில் வைத்திருக்கும் உத்தரவு கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...