நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா கட்டுப்பாடு கோயில்களின் முன் நடைபெற்ற திருமணங்கள்

கடலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில்களின் முன் வெள்ளிக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:00 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில்களின் முன் வெள்ளிக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன.

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கோயில்களில் திருமணம் நடத்துவதற்கும், முக்கிய நாள்களில் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ் மாதமான ஆவணி பிறந்துள்ள நிலையில் முதல் முகூா்த்த நாளான வெள்ளிக்கிழமை கடலூா் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் முன் சுமாா் 70 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனா். கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி இல்லாததால், கோயில் முன் நின்று சுவாமியை வணங்கிச் சென்றனா்.ஒரே இடத்தில் திரளானோா் கூடியதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பலரும் முகக் கவசம் அணியவில்லை.

இதேபோல, முதுநகரில் உள்ள ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உள்பட புகழ்பெற்ற தலங்களின் முன்பும் திருமணங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.