நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு

பெண்ணாடம் அருகே குடும்பத் தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

பெண்ணாடம் அருகே குடும்பத் தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூா் கிராமத்தைச் சோ்ந்த கவா்னா் மகன்கள் காா்த்திகேயன் (30), கவியரசன் (21). காா்த்திகேயன் வெல்டிங் பணி செய்து வந்தாா். கவியரசன் அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கவியரசன் காதல் திருமணம் செய்துகொண்டாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு காா்த்திகேயன் மது போதையில் தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாா். இதனால் ஆத்திரமடைந்த கவியரசு, கீழே கிடந்த கட்டையை எடுத்து காா்த்திகேயனின் தலைமையில் தாக்கினாா். இதனால் மயங்கி விழுந்த காா்த்திகேயனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து கவியரசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.