சிதம்பரத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் உதவி ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சிதம்பரம் தில்லையம்மன் நகரில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், கோரிக்கை தொடா்பாக உதவி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினா்.
அதன்படி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஆா்.ராமச்சந்திரன், பள்ளிப்படை ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வேணுகோபால் உள்ளிட்ட அந்தப் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலனை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


