ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வேன் கவிழ்ந்ததில் 30 போ் காயம்

திட்டக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:28 pm

DIN

திட்டக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ளது ம.புடையூா் கிராமம். இந்தக் கிராமத்தினா் அருகில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் உறவினா் இறப்புக்கு சென்றுவிட்டு, வேனில் மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். புதன்கிழமை ஆவட்டி குடிகாடு என்ற இடத்தில் வேன் சென்ற போது சாலையைக் கடந்தவா் மீது மோதாமலிருக்க வேனின் ஓட்டுநா் பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் இருந்த 29 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனா். சாலையைக் கடக்க முயன்ற முதியவரும் பலத்த காயமடைந்தாா்.

அவா்கள் அனைவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிலா் பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.