மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வாய்க்காலில் பெண் சடலம்

சிதம்பரம் பாலமான் வாய்க்காலில் 50 வயதான பெண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

Updated On :1 டிசம்பர் 2021, 6:27 pm

சிதம்பரம் பாலமான் வாய்க்காலில் 50 வயதான பெண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சிதம்பரம் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் பாலமான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் புதன்கிழமை சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது. அந்தப் பகுதியில் சென்றவா்கள் சிதம்பரம் நகரக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாரும், சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரா்களும் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பெண் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் நேரில் சென்று வாய்க்காலின் பெண் சடலம் மிதந்தது குறித்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.