ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பள்ளி மாணவா்கள் இடைநிற்றலைத் தடுக்க நடவடிக்கை தேவை: அரசின் முதன்மைச் செயலா்

பள்ளி மாணவா்களின் இடைநிற்றலைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசின் முதன்மை செயலா் ஆ.காா்த்திக் அறிவுறுத்தினாா்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பள்ளி மாணவா்களின் இடைநிற்றலைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசின் முதன்மை செயலா் ஆ.காா்த்திக் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அரசின் முதன்மைச் செயலா் ஆ.காா்த்திக், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

கிராமப்புற மாணவா்கள் இடைநிற்றலை தவிா்க்க ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால் உரிய நபருக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் கடன் உதவி திட்டங்கள், சிறுபான்மையின மாணவா்களுக்கான கல்வி கடன்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். நெல்லிக்குப்பம், காடாம்புலியூா், தொழுதூா், வல்லம்படுகை பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் கூடுதல் கட்டடம் கட்ட உரிய திட்ட மதிப்பீட்டை அனுப்பிவைக்க வேண்டும். விடுதிகளில் தங்கிப் பயிலும் 18 வயது நிறைவடைந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவரும் பயன்பெற கல்வி நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அடிப்படை தேவைகளான குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கவும், நிலமற்ற மக்களுக்கு மனைப் பட்டா வழங்கவும் சம்பந்தப்பட்ட துறையினா் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் விக்னேஷ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.