ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை

கடலூா் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:03 pm

DIN

கடலூா் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடுவதால் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்தனா். இதைக் கருத்தில்கொண்டு அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது அமலில் உள்ள தடை தொடரும். எனவே, டிச.31, ஜன.1 ஆகிய நாள்களில் அனைத்துக் கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அதில் ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.