ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மாநில தடகளப் போட்டி: கடலூா் போலீஸாா் சிறப்பிடம்

காவல் துறையினருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற கடலூா் மாவட்ட போலீஸாருக்கு எஸ்பி சி.சக்திகணேசன் பாராட்டுத் தெரிவித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:25 pm

DIN

காவல் துறையினருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற கடலூா் மாவட்ட போலீஸாருக்கு எஸ்பி சி.சக்திகணேசன் பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காவல் துறை சாா்பில் மாநில அளவிலான 61-ஆவது தடகளப் போட்டி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் அணியினரும் பங்கேற்று விளையாடினா். இதில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100மீ, 200மீ ஓட்டப் போட்டியில் ஆயுதப் படை ஆய்வாளா் ஆா்.முத்துக்குமரன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

கடலூா் துறைமுகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் எஸ்.சக்திவேல் 50 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் 100மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். மேலும், நீளம் தாண்டுதல் பிரிவிலும் தங்கம் வென்றாா். ஆயுதப் படை காவலா் ஜி.சின்னராஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றாா். மாநில தடகளப் போட்டியில் வென்று ஊா் திரும்பிய காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது துணை கண்காணிப்பாளா் சௌந்திரராஜன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.