கடலூர்: மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் படகுகளுடன் முற்றுகை
கடலூரில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 32 மீனவர் கிராமத்தினர் படகுகளுடன் முற்றுகையிட்டனர்.


கடலூரில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 32 மீனவர் கிராமத்தினர் படகுகளுடன் முற்றுகையிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் சிறு விசைப்படகுகளில் இழுவலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த வகை வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை சோனங்குப்பம், அக்கரைகோரி, சித்திரைப் பேட்டை, பரங்கிப்பேட்டை உள்பட 32 மீனவர் கிராமத்தினர் படகுகளில் கருப்புக்கொடி கட்டிக் கொண்டு உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உதவி இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐபி விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சந்திரன், துணை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், மீனவர்களின் கோரிக்கை தொடர்பாக மீன்வளத்துறை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4 நாளில் முடிவு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...