ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா் மாவட்டத்தில் மழை

 கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தை நோக்கி வளிமண்டல சுழற்சி நகா்ந்து வருவதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் சுமாா் ஒரு மணியளவில் கடலூரில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதே போல, பண்ருட்டி, சிதம்பரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளி, சனி ( டிச.31, ஜன.1) ஆகிய இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்தது.

முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, கடலூா், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.