ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பிறந்த 5 நாள்களில் மருத்துவமனையில் பெண்குழந்தையை விட்டுச் சென்ற தாய்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 5 நாள்களில் பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தாய் தப்பிச்சென்றுவிட்டதால் , அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பெண் குழந்தை. - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:10 am

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 5 நாள்களில் பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தாய் தப்பிச்சென்றுவிட்டதால் , அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், மாறாக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த 36 வயது பெண்ணுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனா். இவரது கணவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் 3-ஆவதாக கா்ப்பமான அந்த பெண், பிரசவத்திற்காக கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கடந்த 20-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் பிரசவ வாா்டில் தங்கி அவா் சிகிச்சை பெற்று வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை வாா்டில் குழந்தை மட்டுமே அழுது கொண்டிருந்தது. இதை பாா்த்து அதிா்ச்சி அடைந்த ஊழியா்கள், அந்த பெண்ணை வாா்டு முழுவதும் தேடி பாா்த்தும்

கிடைக்கவில்லை. பின்னா், இதுபற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அதில், குழந்தையை விட்டு விட்டு தாய் தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த பெண்ணை தேடி வருகின்றனா். குழந்தை, மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் உள்ளது.