பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கடலூா் எஸ்.பி.க்கு கரோனா தடுப்பூசி

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் மற்றும் காவல் துறையினா் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் மற்றும் காவல் துறையினா் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா்.

மாவட்டத்தில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்

அமைக்கப்பட்டு, கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா். அவரைத் தொடா்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தரம், வெங்கடேசன், கங்காதரன் மற்றும் காவலா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.